Wednesday, 2 April 2014

கற்றலை மேம்படுத்த செலவில்லாத மூன்று செயல்கள்

திரு சுபிர் சுக்ல ignusERG என்ற நிறுவனத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர். அவர் தன Education Matters என்ற blog ல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குழந்தைகளின் கற்றல் மேம்பட ஆசிரியர்கள் செய்யவேண்டிய மூன்று செயல்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். முற்றிலும் செலவில்லாத மூன்று செயல்கள்.

குழந்தைகளைப் பார்த்து புன்னகை சிந்துங்கள். எப்போதெல்லாம் உங்களால் முடியுமோ அப்போதெல்லாம் அவர்களைப் பார்த்து சிரியுங்கள். பிறகு வழக்கம்போல் கற்பித்தலை தொடருங்கள். சில நாள்களுக்குப் பிறகு குழந்தைகளின் கற்றல் முன்னேறியிருப்பதைக் காணலாம்.

அடுத்து, குழந்தைகளைப் பேச விடுங்கள். அவர்கள் பேச்சுக்கு செவி கொடுங்கள். நாம் அவர்கள்பால் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும் வழி இது. இப்படி செய்வது குழந்தைகளின் கற்றலைக் கூட்டும் என்கிறார் அவர்.

இறுதியாக நாம் குழந்தைகளாக இருந்தபோது எதையெல்லாம் விரும்பினோமோ அதையெல்லாம் நம் குழந்தைகளும் விரும்பிட, அனுபவிக்க வாய்ப்பளியுங்கள். யாருடைய உதவியு,ம் இல்லாமல் மிதிவண்டி ஓட்டியது, நீச்சல் அடித்தது, ஒரு புத்தகத்தை வாசித்து ரசித்தது... என அவர்களின் திறனுக்கேற்ப செயல்பாடுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்தினால் அவர்களின் கற்றல் திறன் வளரும் என்கிறார்.

இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல நம்மைப்போன்ற பெற்றோர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்

தற்போது நாம் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டோம். நம் குழந்தைப் பருவத்தை வசதியாக மறந்துவிட்டோம். குழந்தைகளுடன் பழகும் ஒவ்வொருமுறையும் நம் குழந்தைப் பருவத்தை திரும்பிப் பார்க்க கிடைக்கும் அருமையான வாய்ப்பு. சவால்களான செயல்களை செய்து பெருமையாடித்ததை நினைத்து பாருங்கள். அதுபோல் குழந்தைகளும் பெருமைகொள்ள வேண்டாமா?

இது கோடை விடுமுறைக்காலம். இக்கருத்துக்கள் மிகவும் பொருத்தமான நேரம்.
லாப நோக்கோடு பல நிறுவனகள்நடத்தும் முகாம்களில் குழந்தைகளை விட்டுவிட்டு அக்கடா என்று இருக்கப் போகிறோமா? அல்லது இந்த் அவசர உலகல்த்திலும் நம் அனைத்துமான குழந்தைகளுக்காக சற்று நேரம் ஒதுக்கப் போகிறோமா? யோசிப்போம்.

No comments:

Post a Comment