Sunday, 4 November 2012

மூலையில் இருக்கும் குழந்தையின் வேண்டுகோள் 

தெரிந்து கொள்ளத்தான் கேள்வியே
ஆனால் நீங்கள் தெரிந்துவைத்துகொண்டே
கேள்விகள் கேட்டீர்கள்
பதில் தெரியாத கேள்வியை
பார்வையால் பரிதவிக்க விடுவீர்கள்

வேட்ட்ருதாளாய் நினைத்து
விரும்பியதை எழுதினீர்கள்
களிமண்ணாய் நினைத்து
கைக்குள் போட்டு பிசைந்தீர்கள்

ஸ்பாஞ் என்று நினைத்து
ஊற்றுனீ ர்கள் ஊற்றுனீ ர்கள்
ஊற்றிகொண் டேய் இருந்தீர்கள்

அடுக்கினீ ர்கள்
ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கினீ ர்கள்
கோட்டையானது
கருத்துக்களின் கொட்டையானது

ஆனால்
அடிப்படையை அசைத்து பார்க்க
மறந்துவிட் டீர்கள்

சரிந்து விழுந்து சிதைந்து போனது
கருத்துகளின் கோட்டை

கேடுபாடுகளுக்கிடையே நான் புதையுண்டுபோனேன்

ஆனால் நான் ஒரு விதை
என்னுள் புதைந்திருக்கிறது ஆலமரம்
விஸ்வரூபம் பெறும் ஆலமரம்

நீங்கள்
ஒரு தோட்டக்காரர்
செடியோடு உறவாடும் தோட்டக்காரர்

உரம் இட்டால் போதாது
என் கரம் பற்றி உரசி செல்லுங்கள்
களை  எடுத்தால் போதாது
கட்டிபிடியுங்கள்
விஷத்தை தெளிக்காதீர்கள்
என்னுள் இருக்கும் அமுதமும் விஷமாகும்

காத்திருங்கள்
அவசரபடாதீர்கள்
பூப்படையும்வரை காத்திருங்கள்
பிஞ்சிலே பிடுங்காதீர்கள்

பிஞ்சில் பழுத்த பழம் பாழ்

ஒரு விதையிலிருந்து பல விதை
எனவே எனக்கு அழிவில்லை

அழியாத என்னை அழகாக பார்த்துகொள்ளுங்கள்

தொண்டை வரள்கிறது
தண்ணீர் ஊற்றுங்கள்
மூச்சு முட்டுகிறது
காற்றுக்கு வழிவிடுங்கள்
கூரைகளால் மூடிவிடாதீர்கள்

வெளிச்சம் என் உடலை தழுவட்டும்





No comments:

Post a Comment